ஸ்ரீவில்லிபுத்துார்:'' ரஜினியை தலைவராக ஏற்றால் கமலை ஏற்று வரவேற்கலாம் ,'' என ஹிந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ரஜினி தலைமையில் ஆன்மிக ஆட்சி அமைய ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்துள்ளோம். நடக்க உள்ள தேர்தலில் ஆன்மிக ஆட்சி மலரும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வள்ளுவன் கோட்டையாக மாறும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். அதை மத்திய அரசு கட்டுபடுத்தி ஜி.எஸ்.டி.,வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.
தமிழக அரசும் தங்களின் வரிவிதிப்பை குறைத்து கொள்ளவேண்டும்.தமிழகத்தில் அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மக்களுக்கு வழங்குவது ஓட்டுமானியம். மோடி வழங்குவது மட்டுமே மக்களுக்கான மானியம். ஐயப்பனுக்கும், ஆண்டாளுக்கும் எதிரானவர்கள் கம்யூனிஸ்ட்கள். இதனால் தான் மக்களிடம் அவர்களின் செல்வாக்கு குறைந்து வருகிறது. கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாசார சீரழிவை ஏற்படுத்துவதால் அதை தடை செய்யவேண்டும். ரஜினி முதல்வராக விரும்பவில்லை. சிஸ்டத்தை சரி செய்ய விரும்புகிறார். அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்றுவது தான் ஆன்மிக ஆட்சி,என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE