புதுச்சேரி : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
சாமிப்பிள்ளைத் தோட்டம், லெனின் நகர், வாஞ்சிநாதன் நகர், ஜோதி நகர், பகத்சிங் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும். இப்பகுதி வழியாக செல்லும் அணைக்கரை மேடு வாய்க்காலுக்கு மதில் சுவர் கட்டித் தர வேண்டும். கொசுத் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருவடிக்குப்பம் சிங்கம் பார்க் அருகே சாலை மறியல் போராட்டம் இந்திய கம்யூ., பொருளாளர் சுப்பையா தலைமையில் நடந்தது.மறியலில் காமராஜ் நகர் தொகுதி பொருளாளர் மாதவராமன், துணைச் செயலர் தயாளன், கிளை செயலர்கள் அண்ணாமலை, ஸ்டாலின், பிரதாப், பிரகாஷ், அக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலை, தாசில்தார் குமரன், உழவர்கரை நகராட்சி பொறியாளர் மலைவாசன் உள்ளிட்டோர் தடுப்புக் கட்டை கட்டி தருவதாக உறுதியளித்தனர்.இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென் றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE