புதுச்சேரி : புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் ஏழாவது ஊதியக்குழு சம்பளம் நிலுவை வழங்க கோரி தர்ணா போராட்டம் நடத்தினர்.
அமைச்சக ஊழியர் கூட்டமைப்பு சார்பில், ஜென்மராகினி ஆலயம் அருகில் நடந்த போராட்டத்திற்கு, பொதுச்செயலர் முருகசாமி தலைமை தாங்கினார். தலைவர் பக்கிரிசாமி, பொருளாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.காலியாக உள்ள அமைச்சக பதவிகளை, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE