திண்டுக்கல்:'பொருளாதாரத்தில் ஒருவர் முன்னேற கல்வியால் தான் முடியும்.' என, திண்டுக்கல்லில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திண்டுக்கல்லில் 5 மாவட்ட மழலையர், தொடக்க பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா நடந்தது.அதில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி, கிராமத்தினரும் மருத்துவராக வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர் தான் முக்கியம். கல்வியாளர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்ட பின் முடிவு செய்யப்படும். பள்ளிகளை திறப்பது குறித்து இப்போதே தேதி குறிப்பிட இயலாது. கட்டணம் வசூலித்தபின் ஆன்லைன் வகுப்பு நடத்தாமல், மாணவர்களாகவே பயிலும்படி கூறிய 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE