புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவின்போது, மகர கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனி பெயர்ச்சி விழா வரும் 27 ம் தேதி நடக்கிறது. அன்று காலை 5:22 மணிக்கு, சனீஸ்வர பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, 1000 லிட்டர் நல்லெண்ணையால் சனீஸ்வர பகவானுக்கு அபிேஷகம் நடக்கிறது. மறுநாள் 27ம் தேதி, காலை 5:22 மணிக்கு, சனிப்பெயர்ச்சி நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள 80 அடி உயர மகர கும்பத்தில், 8000 லிட்டர் நல்லெண்ணை ஊற்றி மகா தீபம் ஏற்றி, 44 நாட்களுக்கு, சனீஸ்வர பகவானுக்கு தில தைலாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE