சென்னை:கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக கால்நடை பராமரிப்பு பணியில், கால்நடை உதவி மருத்துவர் பதவியில், 1,141 இடங்களுக்கு, பிப்ரவரி, 23ல் தேர்வு நடந்தது. இதில், 2,015 பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகளை, அரசு பணியாளர் தேர்வாணையம், நேற்று வெளியிட்டுள்ளது.
மொத்தம், 2,015 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஜன., 4 முதல், 29 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE