மூங்கில்துறைப்பட்டு : சவரியார்பாளையத்தில் வடிகால் வசதியின்றி தெருவில் மழைநீர் தேங்கி நின்றதால் மக்ககள் அவதியடைந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தில் பெய்த கன மழை காரணமாக ரேஷன் கடை தெருவில் மழை நீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கியது. மேலும், தாழ்வாக உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றவும், நிரந்தர வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE