சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1170 பேர் கொரோனா குணமாகி டிஸ்சார்ஜ் ஆகினர். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநிலத்தில் நேற்று மட்டும் 75 ஆயிரத்து 347 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதில் 1134 பேருக்கு தொற்று உறுதியானது.சிகிச்சை பெறுவர்களில் 1170 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். தற்போது 9781 பேர் சிகிச்சையில் உள்ளனர். சில தினங்களில் இறந்தவர்களில் சென்னையில் மூன்று பேர் உட்பட 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை 11 ஆயிரத்து 954 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE