வாஷிங்டன்:'மாடர்னா' நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் 'பைசர் - பயோ என்டெக்' நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
இதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் 'மாடர்னா' நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையும்(எப்டிஏ) நேற்று அனுமதி வழங்கியது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்டீபன் ஹன் கூறுகையில், கொரோனாவை தடுக்க இரண்டு தடுப்பூசிகள் உள்ள நிலையில், எப்டிஏ முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பாராட்டுகள், ‛மாடர்னா' தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
விரைவில், அமெரிக்காவின் இரண்டாவது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE