கள்ளக்குறிச்சி : கோமுகி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கல்வராயன்மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால், கள்ளக்குறிச்சியில் உள்ள கோமுகி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், கரை பகுதியினை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE