வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் அ.ம.மு.க., வினர் ஊர்வலத்தால் போக்குவரத்து பாதித்தது.
வத்தலக்குண்டில் அ.ம.மு.க.,வின் சின்னம் அறிமுக விழா நடந்தது. இதற்காக அக்கட்சியினர் சின்னத்துடன் காளியம்மன் கோவில் முதல் பஸ்ஸ்டாண்ட் வரை மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். மெதுவாக சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. போலீசாரும் செய்வதறியாது விழித்தனர்.வத்தலக்குண்டில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மறியல் ஆகியவை காளியம்மன் கோவில் முன்பாகவே நடக்கிறது. இப்பகுதி நான்கு ரோடு சந்திப்பாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் ஆர்ப்பாட்டங்களுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும். கட்சியினரும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி செயல்பட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE