வத்தலக்குண்டு : அ.தி.மு.க.,வில் பெண் வாக்காளர்களை கவர 25 பேர் கொண்ட பெண்கள் பூத் கமிட்டி உருவாக்கப்படுகிறது.
தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளன. தி.மு.க., இளைஞர்களைக் கொண்டு தொழில்நுட்ப அணியை வலுப்படுத்தி தி.மு.க.,வின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை விமர்சித்து வருகிறது. அ.தி.மு.க.,வினர் தேன்மொழி எம்.எல்.ஏ., தலைமையில் இளைஞர் பாசறை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.மேலும் பெண் வாக்காளர்களை கவர 25 பேர் கொண்ட பெண்கள் பூத் கமிட்டி உருவாக்கி உள்ளனர். இவர்கள் பெண்களை ஓட்டளிக்க அழைத்து வர பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பூத் கமிட்டி பெண்களுக்கு வாரச் சம்பளம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE