திருநெல்வேலி:திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் கலாப்ரியா, பாலகுமாரன் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர், கலாப்ரியா என்ற தி.க. சோமசுந்தரம், 70. ஓய்வு பெற்ற வங்கி பணியாளர். 50 ஆண்டுகளாக கவிதை, புனை கதைகள் படைப்பாளர்.தமிழக அரசின் கலைமாமணி, கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பெயரில், இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
இரண்டாம் ஆண்டாக, தற்போதைய விருதுக்கு, கலாப்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை டிச., 20ல் சென்னையில் நடக்கும் விழாவில் விருது பெறுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE