மேட்டுப்பாளையம்:காரமடை அருகே ஆதிவாசி அடித்து கொலை செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், காரமடை அடுத்த வெள்ளியங்காடு அருகே மலைப்பகுதியில் உள்ள அன்சூர் ஆதிவாசி கிராமத்தில் வசிப்பவர் காளி, 58. இவருக்கு மனைவி, 4 குழந்தைகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் தருமன்; கூலித்தொழிலாளி.வேலை முடிந்து வீடு திரும்பிய தருமன், தன் மனைவியுடன் காளி பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார்.
அப்போது, காளிக்கும், தருமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தருமன், இரும்பு கம்பியால், காளியை தாக்கினார். பலத்த காயமடைந்த காளி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.காரமடை போலீசார், தலைமறைவாக இருக்கும் தருமனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE