சென்னை:அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. பின், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிக்கப்பட்டது.இதையடுத்து, பல்வேறு வழக்குகள் காரணமாக, முடிவுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு தேர்வானவர்களின் விபரம் மட்டும், trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE