மதுரை : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இயக்க நிர்வாகிகள் சோலையன், சரவணன், நடராஜன், சரவணபெருமாள், கல்யாணி, மணிகண்டன், மாரியப்பன், மனோகரன், ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னபொன்னு நன்றி கூறினார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும் என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE