பாலக்காடு:பாலக்காடு நகராட்சி முன் நேற்று மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., கட்சியினர் மீண்டும் பாலக்காடு நகராட்சியை கைப்பற்றியுள்ளனர். இதை கொண்டாடிய கட்சியினர், நகராட்சி கட்டடம் முன் 'ஜெய் ஸ்ரீராம்' என்று எழுதிய பேனரை கட்டினர். இது தொடர்பாக நகராட்சி செயலாளர் பலராமன் அளித்த புகாரை விசாரித்த போலீசார், 10 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் இளைஞர் அணியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அலுவலகத்தினுள் புகுந்து, ஒரு மணி நேரம் கோஷமிட்டனர்.பா.ஜ., பேனர் கட்டிய அதே இடத்தில், தேசிய கொடியை கட்டினர். அப்போது, தேசிய கொடியை தலைகீழாக கட்டியதாக, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் தரப்பட்டது.பா.ஜ., கட்சியினரை கண்டித்து, காங்., இளைஞர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார், தடியடி நடத்தினர். இதில், ஒரு சிலர் காயமுற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE