கூடலுார்:அறுவடை காலத்தில், காபி பூக்கள் பூத்துள்ளதால், மகசூல் பாதிக்கும் என கூடலுார் காபி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுாரில், 17 ஆயிரத்து 375 ஏக்கரில், 'அரபிகா, 'ரோபஸ்டா' காபி வகை பயிரிடப்படுகிறது. ரோபஸ்டா மட்டும், 11 ஆயிரத்து 423 ஏக்கர் பயிராகியுள்ளது.ரோபஸ்டா காபி அறுவடை துவங்கியுள்ள நிலையில், செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'இந்தாண்டு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இப்போது பூத்துள்ள பூக்கள், அறுவடையின்போது உதிர்ந்து விடும் என்பதால் மகசூல் பாதிக்கும்' என்றனர்.காபி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பத்து நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, காபி செடிகள் பூத்துள்ளன. விவசாயிகள் கவனமாக காபி அறுவடை செய்ய வேண்டும். இந்த பூக்கள் உதிர்ந்தாலும், அறுவடைக்கு பின், பிப்., மாத மகசூல் பாதிப்பு இருக்காது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE