கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களில், ஒருவரது ஜாமின் மனு மீண்டும் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த வழக்கில் மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு,25, கூட்டாளிகள் சபரிராஜன்,25, சதீஷ்,28, வசந்தகுமார்,27, மணிவண்ணன்,28,ஆகியோர், 2019, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. ஜாமின் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனு, ஏற்கனவே பல முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சதீஷ் மீண்டும் மனு செய்தார். விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, ஜாமின்மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE