கோவை:போர்வெல் அமைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாநகராட்சி, வார்டு-14, வேலாண்டிபாளையம், அண்ணா நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் போர்வெல் அமைக்க, வடக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, அண்ணா நகர், சாஸ்திரி நகருக்கு, 9.9 லட்சம் ரூபாயும், மற்ற பகுதிகளுக்கு, 7.8 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது.மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தில் போர்வெல் அமைக்க, நேற்று மதியம் போர்வெல் லாரி சென்றது. இதனை தடுத்து நிறுத்திய அப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த இடத்தில் மைதானம் உள்ளதால், வேறு இடத்தில் போர்வெல் அமைக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போர்வெல் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE