அவிநாசி;அவிநாசி, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் (ஏ.சி.எம்.எஸ்.,) கடந்தாண்டு, 1.12 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.அவிநாசி, ஏ.சி.எம்.எஸ்., மகாசபை கூட்டம், அதன் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடந்தது. சங்க பொது மேலாளர் சண்முகம் வரவேற்றார். துணை தலைவர் ஜெயபால், மேலாண்மை இயக்குனர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.கடந்த, 2018 - 19ல், சங்கம், 1.12 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது; சட்ட விதிகளுக்கு உட்பட்டு, லாப பிரிவினை செய்வதென, தீர்மானிக்கப்பட்டது. சங்க குடோனில் விளை பொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு சரக்கீட்டு கடனாக, 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது.இதனை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்களின் பங்கு தொகை, 10 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அந்த தொகையை செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE