திருப்பூர்:காஸ் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூரில் நுாதன போராட்டம் நடந்தது.காஸ் சிலிண்டர், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நேற்று திருப்பூரில் மா. கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.மாநகராட்சி சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாநகர செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் உண்ணிகிருஷ்ணன், மூர்த்தி முன்னிலை வகித்தனர்.இதில் பங்கேற்ற தொண்டர்கள், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற கோரி கோஷமிட்டனர். போராட்டத்தின் போது, காஸ் சிலிண்டருக்கு, அஞ்சலி செய்யும் வகையில், கட் சியினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE