திருப்பூர்:சக் ஷம் அமைப்பு, திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி, ரோட்டரி வளாகத்தில் நடந்தது.மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால், கை மற்றும் உபகரணங்கள், பார்வையற்றவருக்கான சிறப்பு 'மொபைல்' போன் வழங்கப்பட்டது. தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியை வழங்கினார்.வடக்கு ரோட்டரி தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். சக் ஷம் அமைப்பு தலைவர் ரத்தினசாமி, ரோட்டரி செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் மணிகண்டன், உதவி கவர்னர் ஜெகநாதன், சக் ஷம் மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE