திருப்பூர்:மின்வாரியத்தை கண்டித்து, 24ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென, தி.மு.க., அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க அவசர கூட்டம், தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தொ.மு.ச., பேரவை துணை பொதுசெயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.மின்வாரியம், 50 சதவீத களப்பணியை தனியாருக்கு விடுவதை கண் டித்து, வரும் 24ம் தேதி, திருப்பூர், மேட்டுப்பாளையத்தில் உள்ள, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE