திருப்பூர்:மாநில, தேசிய, பல்கலை அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவருக்கு, ரயில்வேயில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் நிரப்பட உள்ளன. தடகளம், பேட்மின்டன், பளுதுாக்குதல், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, நீச்சல், கோல்ப் போட்டியில் தேசிய, மாநில, பல்கலை அளவில் பங்கேற்று குறைந்தது மூன்றாவது இடம் பெற்றவர் பங்கேற்கலாம்.விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., பெற்றிருந்தால் வேண்டும். 2021., ஜன., 1 ம் தேதி நிலரவப்படி, 18 முதல், 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்களை www.rrchubli.in என்ற இணையதளத்தில் அறியலாம். விண்ணப்பிக்க டிச., 28ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE