திருப்பூர்:ரயில்வே ஸ்டேஷனில் நிறுவியுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் கிழக்கு ரோட்டரி நிர்வாகிகள், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பயணிகள் பயன்படுத்தும் வகையில், ரோட்டரி சங்கம் சார்பில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரித்த குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.நிரந்தர குடிநீர் இணைப்பு இல்லாததால், செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த, இரண்டரை ஆண்டுகளாக, பயன்பாடின்றி இருக்கிறது. புதிய குடிநீர் இணைப்பு வழங்கினால், சுத்திகரிப்பு கருவியை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க, கிழக்கு ரோட்டரி தயாராக இருக்கிறது.இவ்வாறு, அதில் அவர் கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE