திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கபடி கழக சார்பில் பள்ளி, கல்லுாரியில் பயிலும்கபடி விளையாட்டு வீரர்களுக்கு கல்வி உதவித்தொகை, உணவு மற்றும் விடுதி கட்டணம் வழங்கும் விழா நடந்தது.கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட கபடி கழக தலைவர் மனோகரன், செயலர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி முன்னிலை வகித்தனர்.நடுவர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். இதில், ஒரு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.மாவட்ட இணை செயலர் செல்வராஜ், நடுவர்குழு கன்வீனர் சேகர், இணை கன்வீனர் தண்டபாணி, பாண்டியன் அணி மேலாளர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ஆறுச்சாமி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE