திருப்பூர்:திருப்பூர், காவிலிபாளையத்தில் இரவு நேரம் பைக்கில் வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை, கத்தியை காட்டி மிரட்டி, பைக் மற்றும் மொபைல் போனை ஒரு நபர் பறித்து தப்பினார்.இது தொடர்பாக, வேலம்பாளையம் போலீசார், சாமுண்டிபுரத்தை சேர்ந்த நந்தகுமார், 22, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே அனுப்பர்பாளையத்தில் ஒரு வழிப்பறி மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது ஆகிய இரு குற்ற வழக்குகள் உள்ளன.இதனால், நந்தகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான நகல் கோவை மத்திய சிறையில் உள்ள நந்தகுமாருக்கு அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE