பொள்ளாச்சி:பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் இருந்து, டி.எஸ்.பி., அலுவலகம் இணைப்பு ரோடு செல்கிறது. இந்த ரோடு வழியாக மகாலிங்கபுரம் குடியிருப்பு பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர். மேலும், எல்.ஐ.ஜி., காலனி மக்களும் இந்த ரோட்டையே பயன்படுத்துகின்றனர்.எல்.ஐ.ஜி., காலனி ரோடு - டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் ரோடு சந்திப்பு பகுதியில் பெரிய பள்ளம் உள்ளதால் விபத்து ஏற்படுகிறது. கவனமின்றி வரும் வாகன ஓட்டுனர்கள், பள்ளத்துக்குள் இறங்குவதால் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும், பள்ளத்தில் இருந்து வாகனத்தை மேல் பகுதிக்கு கொண்டு வர வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, சந்திப்பு பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE