பொள்ளாச்சி:பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம், குரும்பபாளையம், கோவில்பாளையம் மற்றும் நெகமம் பகுதிக்கு, டி.கோட்டாம்பட்டி வழியாக செல்லலாம். சமீபத்தில், ரோடு அகலப்படுத்தப்பட்டு, சாக்கடை குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோட்டாம்பட்டியில் இருந்து, ஸ்ரீபுரம் வரையிலான ரோடு அகலமாக இருந்தும், இரு பக்கமும் வீடுகள், மரங்கள், முட்புதர்களும் உள்ளதால், வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்கள் காயமடைகின்றனர். இந்த ரோட்டில், தனியார் பள்ளியும் இருப்பதால், எதிர்பாராத விபத்துகள் நடக்காமல் தடுக்க, ரோட்டில், ஒன்பது இடங்களில் உள்ள அபாயகரமான வளைவுகளில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, குடியிருப்போரும், ரோட்டை பயன்படுத்துவோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்றிய அதிகாரிகளிடம், ரோடு வளைவு பகுதிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க, வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE