உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களில், மார்கழி மாத பஜனை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியுள்ளது. கோவில்களில், தனுர் மாத சிறப்பு வழிபாடுகளும் அதிகாலை முதல் நடக்கிறது.பிள்ளையார் பிடிப்பதும், வண்ண கோலங்களும், நகரப்பகுதியில் குறைந்துவிட்ட நிலையிலும், கிராமங்களில் இன்றும் பின்பற்றுகின்றனர். இவை மட்டுமின்றி, அதிகாலை பொழுதை வரவேற்பதாக, வண்ண கோலங்கள் ஒவ்வொரு வாசலிலும் பூத்திருப்பது இம்மாதத்தின் மற்றொரு சிறப்பு.உடுமலை சித்திபுத்தி விநாயகர் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி பக்தர்கள் விநாயகருக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE