உடுமலை:உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில், நேற்று மின்கம்பத்தில் ஏறிய செல்வராஜ் 35, என்பவர் மீது மின்சாரம் எதிர்பாராதவிதமாக தாக்கி இறந்தார். மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கிய அவரது சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. செல்வராஜ் யாருடைய வழிகாட்டுதலின் படி, மின்கம்பத்தில் ஏறினார் என்பது குறித்து உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement