கூடலுார்:கூடலுாரில், மார்கழி மாத, ராமர் பஜனை ஊர்வலம் துவங்கி உள்ளது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 'டான்டீ' குடியிருப்பு உட்பட பிற கிராமப்பகுதிகளில் மார்கழி ஒன்றாம் தேதி, ராமர் பஜனை ஊர்வலம் துவங்கி நடந்து வருகிறது. இப்பகுதி இளைஞர்ள், கடும் குளிரிலும், கோவில்களிலிருந்து நாள்தோறும் அதிகாலையில் பசுவான ராமர் குறித்த பாடலை இசையுடன் பாடி, ராமர் விளக்கேற்றி (கம்பம் விளக்கு) கிராமங்களுக்குள் பஜனை பாடிய படி சென்று, வீடுகளில் பூஜை செய்து, சூரிய உதயத்திற்கு முன் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.மார்கழி மாதம் முடிந்து, தை ஒன்றாம் தேதி பொங்கல் திருநாளில் இதன் நிறைவு விழா ஊர்வலம் நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE