ஈரோடு: கட்டுமான பணிக்கு, அட்வான்ஸ் தொகை பெற்ற நிலையில், கட்டட கான்ட்ராக்டர் தலைமறைவாகி விட்டதாக, பெருந்துறை பகுதி மக்கள், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
பெருந்துறையை அடுத்த தாசம்பாளையம், மூங்கில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை, தாசம்பாளையத்தை சேர்ந்த, கட்டட கான்ட்ராக்டர் சண்முகம். இவரிடம் கட்டுமான பணிக்காக, 20க்கும் மேற்பட்டோர், அட்வான்ஸ் தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். கட்டுமான பணி நடந்த நிலையில், சில மாதங்களாக பணி நடக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, கொரோனாவை காரணமாக சொன்னார். இந்நிலையில் சண்முகம் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை கண்டுபிடித்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE