மொடக்குறிச்சி: சிவகிரியில் நடந்த விழாவில், தி.மு.க.,- காங்.,- கொ.ம.தே.க., கட்சியிலிருந்து விலகிய நூற்றுகணக்கானோர், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்றார். விழாவில் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி பேசியதாவது: கடந்த நான்கு மாதத்தில் மட்டும், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு, 600 கோடி ரூபாய்க்கு மேல், முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தால், மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டாரத்தில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். சிவகிரி பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க, 14 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. மக்கள் தேவையை உடனுக்குடன் நிறைவேற்றி, அ.தி.மு.க., அரசு, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE