சேலம்: முதலீட்டாளர்கள் பார்வை, தங்கத்தின் மீது திரும்பியதால், சர்வதேச சந்தையில், அதன் விலை, 18 நாளில், பவுனுக்கு, 1,320 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தங்கம் வெள்ளி வைர நகை வியாபாரிகள் சங்க, மாநில தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: சர்வதேச சந்தையில், தங்கம் விலை தொடர்ந்து சரிந்ததால், அதன் விலை, கடந்த நவ., 20 முதல், நவ., 30 வரை, 10 நாளில், கிராமுக்கு, 765 ரூபாய், பவுனுக்கு, 6,120 ரூபாய் சரிந்து, கிராம், 4,485 ரூபாய், பவுன், 35 ஆயிரத்து, 880 ரூபாய்க்கு விற்றது. கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமலாகி, படிப்படியாக தளர்வால், அமெரிக்காவில் தொழிலதிபர், வியாபாரிகளுக்கு, அரசு சார்பில் மானியம், கடன்கள் தாராளமாக வழங்கப்படுகின்றன. இதனால், அமெரிக்க டாலரின், 'இன்டெக்ஸ்' மதிப்பு, 98ல் இருந்து, 90 டாலராக சரிந்தது. மேலும், அமெரிக்க முதலீட்டாளர்களின் பார்வை, தங்கத்தின் மீது திரும்பியதால், சர்வதேச சந்தையில் அதிகளவில் கொள்முதல் செய்யத்தொடங்கி உள்ளனர். இதனால், அதன் விலை, கடந்த, 18 நாளில், கிராமுக்கு, 165 ரூபாய், பவுனுக்கு, 1,320 ரூபாய் உயர்ந்து, நேற்று, கிராம், 4,650 ரூபாய், பவுன், 37,200 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை, மேலும் உயரவே வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE