தொப்பூர்: தேசிய நெடுஞ்சாலையில், கால்நடைகளை ஏற்றி செல்லும் லாரிகளை மடக்கி, போலீஸ் ஒருவர் பணம் பெறும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் சமத்துவபுரம் பஸ் நிறுத்தம் அருகே, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, இறைச்சிக்காக கால்நடைகளை கேரளாவுக்கு ஏற்றி செல்கின்றனர். லாரிகளை சோதனையின் பேரில் மடக்கி நிறுத்தி, போலீஸ் ஒருவர் பணம் பெறும் வீடியோ, தர்மபுரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தர்மபுரி மாவட்ட போலீஸ்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE