கிருஷ்ணகிரி: தூங்கிக் கொண்டிருந்த விவசாயியின் கொட்டகைக்கு, மர்ம நபர்கள் தீ வைத்ததால், கோழிகள், நாய்கள் இறந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கணுகானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமாச்சாரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர், தனக்கு சொந்தமான பெரமகவுண்டனூரில் உள்ள நிலத்தை, தன் பேரன் இளங்கோவனுக்கு எழுதி வைத்துள்ளார். பின்னர் திடீரென, அந்த உயிலை ரத்து செய்துவிட்டு, தன் சகோதரர் தருமனுக்கு, 55, விற்று விட்டதாக தெரிகிறது. இதனால் இளங்கோவனுக்கும், தருமனுக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, கொட்டகையில் தருமன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் கொட்டகைக்கு தீ வைத்துள்ளது. அக்கம் பக்கத்தினர், தருமனை மீட்டனர். கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 கோழிகள், ஐந்து நாய்கள் கருகி பலியாயின. மேலும் அங்கிருந்த உர மூட்டைகள், கடலைக்காய் ஆகியவையும் எரிந்து நாசமானது. முன்விரோதத்தால், தருமனை எரித்துக் கொள்ள தீ வைத்தார்களா அல்லது வேறு காரணமா என, மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE