ஓசூர்: ஓசூர் அடுத்த தேவிசெட்டிப்பள்ளி கிராமத்தில், வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் மூலம், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து, விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் சண்முகம், நீடித்த நிலையான மானவாரி மேம்பாட்டு இயக்கத்தின் பயன்கள் குறித்து, கூறினார். ஓசூர் வேளாண்மை அலுவலர் ரேணுகா, மானிய திட்டங்கள், சொட்டு நீர் பாசன திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலர் சின்னசாமி, மண்வள மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா நன்றி கூறினார். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மீனா, எல்லப்பன் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE