கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்ட மைய ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், குடும்ப ஓய்வூதியம் ஆணை வழங்குவதில், காலதாமதம் ஏற்படுவது குறித்து, மாவட்ட கருவூல அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்வது. சங்க உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது. மாநில பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பதிவுகளை தொடரலாம் என, மாநில நிர்வாகிகளை கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE