வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, ஆட்டோ மோதியதில் சிறுவன் பலியானார். ஆந்திரா மாநிலம், வி.கோட்டாவிலிருந்து தக்காளி ஏற்றிக் கொண்டு, சரக்கு ஆட்டோ வாணியம்பாடிக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு வந்து கொண்டிருந்தது. வாணியம்பாடி அருகே, துப்பேரியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த தீர்த்தமலை, 45, என்பவர் மகன் சபரீஸ் காந்தன், 3, மீது ஆட்டோ மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சபரீஸ் காந்தன் இறந்தார். அம்பலூர் போலீசார் விசாரித்து, ஆட்டோ டிரைவர் சீனிவாசனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE