கோபி: இரு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத, சேலம் பெண் இன்ஸ்பெக்டருக்கு, கோபி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி ரேவதி, 31; இவரின் உறவினர் சவுந்தர், 25; இருவருக்கும், நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்தது. கடந்த, 2015ல், ஜன., மாதத்தில், ரேவதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ரேவதி புகாரின்படி, அப்போதைய பங்களாப்புதூர் எஸ்.ஐ., பழனியம்மாள் வழக்குப்பதிந்து விசாரித்தார். இதேபோல், டி.என்.,பாளையத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி, 30; அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளியங்கிரி, 30, சிகாமணி, 30, பழனிச்சாமி, 30; இவர்கள், 2015 டிச.,ல் கருப்புச்சாமியை தாக்கினர். அவர் புகாரின்படி, எஸ்.ஐ., பழனியம்மாள் விசாரணை நடத்தினார். இவ்விரு வழக்கும் கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை அதிகாரியான பழனியம்மாள், ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி பாரதிபிரபா, தொடர்ந்து மூன்று விசாரணைக்கு ஆஜராகாத பழனியம்மாளுக்கு, வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது சேலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பழனியம்மாள் உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE