பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், மாநில அளவில் வலு தூக்கும் போட்டி துவங்கியது. தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம், நாமக்கல் மாவட்ட வலு தூக்கும் சங்கம் இணைந்து நடத்தும், ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி பள்ளிபாளையத்தில் நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு போட்டியின் கடைசி நாளன்று, அமைச்சர் தங்கமணி பரிசு வழங்குகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE