ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கூடச்சேரியை சேர்ந்தவர் ரவி,47; ஆட்டோ டிரைவர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், ஆட்டோ விபத்தில் சிக்கி ரவி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ரவிக்கு ரத்தப்பரிசோதனை, சளி மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE