கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மகிளிப்பட்டி, சிந்தலவாடி, லட்சுமணம்பட்டி, காட்டூர், செக்கணம் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் சின்னரோஜா, விரிச்சி பூக்கள், மல்லிகை, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பனி காலம் துவக்கம் காரணமாக பூக்கள் வரத்து சரிந்தது. இதனால் விலை உயர்ந்து விற்பனை நடந்தது. விரிச்சி பூ கிலோ, 70லிருந்து, 120 ரூபாய், சின்னரோஜா, 80லிருந்து, 140 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE