குளித்தலை: கவுண்டம்பட்டி அண்ணாநகரில், தார்ச்சாலை, வடிகால் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த, நெய்தலூர் பஞ்., கவுண்டம்பட்டி அண்ணாநகரில், 60 குடியிருப்புகள் உள்ளன. அண்ணாநகர் பகுதிக்கு வரும் வீதியானது மண் பாதையாக உள்ளதால் மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு சென்று வரும் முக்கிய வீதியாக இருப்பதால் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, தார்ச்சாலை மற்றும் மழை தண்ணீர் வெளியேற்றும் வகையில் வடிகால் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE