விருதுநகர்: முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் ராமசாமி, மகள் அஞ்சலியுடன், மதுரையில் இருந்து, துாத்துக்குடிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் காரில் சென்றார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, பேரிகார்டு இருந்ததால் கார் மெதுவாக சென்றது. அப்போது, பைக்கில் பின் தொடர்ந்த இருவர், காரின் பின்பக்க கண்ணாடியை இரும்பு கம்பியால் தாக்கினர். கண்ணாடி உடைந்ததில், மூவருக்கும் காயம் ஏற்பட்டது. காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, துாத்துக்குடி அனுப்பி வைக்கப்பட்டனர். சசிகலா புஷ்பா, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தற்போது பா.ஜ., வில் உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE