ஊட்டி: நிலம்பூர் அருகே வழிக்கடவு பகுதியை ஒட்டிய வானியம்புழா வனச்சரக எல்லையில் இருட்டுகுத்தி ஆதிவாசி காலனி அருகே ஆக்ரோஷமான நிலையில் ஒற்றைக்கொம்பன் யானை நின்றிருப்பதை இருமாநில வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
கூடலூர் வன அலுவலர் சுமேஷ்சோமன் கூறுகையில், யானை கேரளா வனத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலம்பூர் வடக்கு கோட்ட வன அலுவலர் மார்ட்டின்லோயலுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. யானையை அதே பகுதியில் பிடிப்பதா அல்லது தமிழகத்திற்குள் விரட்டி கொண்டு வருவதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE