வில்லியனுார்: மாநில கூட்டுறவு வங்கி வில்லியனுார் கிளையில் ஏ.டி.எம்., மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி சார்பில் வில்லி யனுார் மேல வீதியில் உள்ள வங்கி கிளையில் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். வங்கி நிர்வாகி வல்லவன் வரவேற்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏ.டி.எம் மையத்தை திறந்து, சேவையை துவக்கி வைத்தார்.விழாவில் வங்கி மேலாண் இயக்குனர் கருணாகரன், பொதுமேலாளர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கிளை மேலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE