வாஷிங்டன் :'மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ராணாவை, நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தொடரும்' என, அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2008 நவம்பர் மாதம், மஹாராஷ்டிராவின் மும்பையில், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்அதில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். அப்போது, தாக்குதல் நடத்திய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
![]()
|
இதில் தொடர்புடைய, டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பரான, கனடாவைச் சேர்ந்த தஹாவூர் ராணாவும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பின்னர், ராணாவை, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த, மத்திய அரசு கோரிக்கை வைத்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே, ராணாவின் ஜாமின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
.
பதிலளிக்க வேண்டும்
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியான் கூறியதாவது: ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, 2021 ஏப்ரல், 22ம் தேதி வரை தொடரும். இது தொடர்பாக, பிப்ரவரி, 1ம் தேதிக்குள், ராணா பதிலளிக்க வேண்டும். அதேபோல், அமெரிக்க அரசு, மார்ச், 22ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE